sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்; பினராயி விஜயன் அறிவிப்பு

/

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்; பினராயி விஜயன் அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்; பினராயி விஜயன் அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்; பினராயி விஜயன் அறிவிப்பு

7


ADDED : டிச 04, 2024 12:58 PM

Google News

ADDED : டிச 04, 2024 12:58 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்; பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. உணவு, குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்களுக்கு இடையே மீட்புப் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினாலும் நிலைமை இன்னமும் சீராகவில்லை. இந் நிலையில் புயலால் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது; பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீது தான் எங்களின் முழு எண்ணங்கள் இருக்கின்றன. இதுபோன்ற சவாலான நேரத்தில் அண்டை மாநிலங்களுடன் கேரளா எப்போதும் ஒற்றுமையாக நிற்கிறது.

தமிழகம் விரும்பும் எந்த உதவிகளையும் வழங்க கேரளா தயாராகவே உள்ளது. இரு மாநிலங்களும் இணைந்து பேரழிவில் இருந்து மீண்டு வருவோம்.

இவ்வாறுஅந்த பதிவில் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us