தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே

ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே

ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே


ADDED : மே 03, 2025 07:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2025 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: '' ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பின்னணி தெரியவில்லை,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து இருந்த காங்கிரஸ், அது எப்போது துவங்கும் எனவும், விரிவான திட்டத்தை வெளியிட வேண்டும் எனக்கூறி வந்தது. தெலுங்கானா மாநில அரசின் திட்டத்தை பின்பற்ற வேண்டும் எனக்கூறிவந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாங்கள் கூறிய போது, ஜாதி ரீதியில் சமூகத்தை பிரிக்க நாங்கள் முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர்கள் குற்றம்சாட்டினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதனை நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது மத்திய அரசு ஏற்கவில்லை. ஆனால், தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்து உள்ளனர்.

இதன் பின்னால் இருக்கும் காரணம் குறித்து தெரியவில்லை. இதில் இருக்கும் ஒரு நல்ல விஷயம், எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது தான். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us