sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு

/

கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு

கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு

கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு


ADDED : பிப் 21, 2025 01:44 AM

Google News

ADDED : பிப் 21, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:வீட்டு கிணற்றில் விழுந்த சிறுத்தையை கூண்டில் மீட்ட வனத்துறையினர், அதை பத்திரமாக பரம்பிக்குளம் வனத்தில் விடுவித்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே உள்ள நெல்லியாம்பதி வன எல்லை பகுதியான புலயம்பாறையில், ஆண்டப்பன் என்பவரின் வீட்டில், தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள், சிறுத்தை ஒன்று நேற்று முன்தினம் இரவு தவறி விழுந்தது.

தகவலறிந்த நெல்லியாம்பதி வனத்துறையினர், நள்ளிரவு 12:00 மணிக்கு, சிறப்பு கூண்டு ஒன்றை கிணற்றுக்குள் இறக்கி, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தாமல் பாதுகாப்பாக மீட்டனர்.

நெல்லியாம்பதி வனச்சரக அதிகாரி ஜெயேந்திரன் கூறுகையில், “இரை தேடி வந்த சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

''இந்த ஆண் சிறுத்தைக்கு, ஒன்றரை வயது இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருப்பது மருத்துவர் நடத்திய பரிசோதனையில் தெரிந்தது. இதையடுத்து, பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது,” என்றார்.






      Dinamalar
      Follow us