sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மருத்துவமனை வளாகத்தில் 'ரீல்ஸ்' 38 பயிற்சி டாக்டர்கள் சஸ்பெண்ட்

/

மருத்துவமனை வளாகத்தில் 'ரீல்ஸ்' 38 பயிற்சி டாக்டர்கள் சஸ்பெண்ட்

மருத்துவமனை வளாகத்தில் 'ரீல்ஸ்' 38 பயிற்சி டாக்டர்கள் சஸ்பெண்ட்

மருத்துவமனை வளாகத்தில் 'ரீல்ஸ்' 38 பயிற்சி டாக்டர்கள் சஸ்பெண்ட்


ADDED : பிப் 10, 2024 11:56 PM

Google News

ADDED : பிப் 10, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதக் : கதக் மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள், 'ரீல்ஸ்' செய்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால், 38 பேரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து, மருத்துவமனை இயக்குனர் பசவராஜா பொம்மனஹள்ளி உத்தரவிட்டுள்ளார்.

'ஜிம்ஸ்' என்ற கதக் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் நடைபாதையில் கன்னடம், ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடிய பயிற்சி டாக்டர்கள், அதை 'ரீல்ஸ்' செய்து, தங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இது வேகமாக பரவியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் ஏழை நோயாளிகள் படும் துன்பம் ஒரு பக்கம்; பயிற்சி டாக்டர்களின் கேலி ரீல்ஸ்கள் மறுபக்கம். 'ரீல்ஸ்' தயாரிக்க வேறு இடம் கிடைக்கவில்லையா என பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இச்சம்பவம் ஜிம்ஸ் இயக்குனர் டாக்டர் பசவராஜா பொம்மனஹள்ளி கவனத்துக்கு வந்தது. இது குறித்து அவர் நேற்று அளித்த பேட்டி:

இவ்விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்தது. சம்பந்தப்பட்ட 38 பயிற்சி டாக்டர்களையும் அழைத்து விசாரித்தோம். விசாரணையின்படி, மருத்துவனை வளாகத்தில் 'ரீல்ஸ்' செய்த 38 பேர், ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

மருத்துவமனையில் இப்படி செய்வது பெரிய குற்றம். நோயாளிகள் அசவுகரியம் ஏற்படும் வகையில் அவர்கள் நடந்து கொண்டது தவறு.

ரீல்ஸ் செய்தவர்கள் அனைவரும் எம்.பி.பி.எஸ்., முடித்து, பயிற்சி டாக்டர்களாக பணியாற்றுகின்றனர். இதுபோன்ற வீடியோவை உருவாக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. வரும் நாட்களில் மருத்துவமனைகளில் இதுபோன்று செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us