ADDED : ஏப் 13, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வாழூரைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் பிரதீப்.
இவர், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே சக்குபள்ளம் பகுதியில் 2023ல் வசித்தார். அப்போது, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கட்டப்பனை அதிவிரைவு சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சு விசாரித்து, பிரதீப்புக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, 61,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

