sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போர் விமானத்தை என்ன செய்யலாம்: நாளை கேரளா வருகிறது பிரிட்டன் நிபுணர்கள் குழு!

/

போர் விமானத்தை என்ன செய்யலாம்: நாளை கேரளா வருகிறது பிரிட்டன் நிபுணர்கள் குழு!

போர் விமானத்தை என்ன செய்யலாம்: நாளை கேரளா வருகிறது பிரிட்டன் நிபுணர்கள் குழு!

போர் விமானத்தை என்ன செய்யலாம்: நாளை கேரளா வருகிறது பிரிட்டன் நிபுணர்கள் குழு!

4


ADDED : ஜூலை 05, 2025 09:56 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 09:56 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: பழுதான நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பிரிட்டீஷ் கடற்படை போர் விமானத்தை, இங்கேயே வைத்து பராமரிப்பு பணியை செய்வதா அல்லது பிரிட்டன் கொண்டு செல்வதா என முடிவு செய்ய அந்நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் குழு நாளை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ், அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் இருந்து கடந்த 14ல் புறப்பட்ட எப்35 பி போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பில் இருந்த போது எரிபொருள் பற்றாக்குறை பிரச்னை காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டது. அங்கு எரிபொருள் நிரப்பினாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை. விமானத்தை பிரித்து கொண்டு செல்லலாமா என்பது கூட ஆலோசிக்கப்பட்டது.

ரூ.640 கோடி மதிப்புள்ள போர் விமானம், கடந்த மூன்று வாரங்களாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சரி செய்ய பிரிட்டிஷ் கடற்படை பொறியாளர்கள் முயன்றாலும் எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், பிரிட்டன் நிபுணர்கள் குழு ஒன்று நாளை கேரளா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 25 பேர் கொண்டு இக்குழுவினர், விமானத்தை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதுடன், அதனை இந்தியாவிலேயே சரி செய்ய முடியுமா அல்லது பிரிட்டன் கொண்டு சென்று சரி செய்வதா என முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தை சரி செய்வதற்கான முயற்சிகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us