sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வனத்தில் சிக்கிய பெண் மீட்பு

/

வனத்தில் சிக்கிய பெண் மீட்பு

வனத்தில் சிக்கிய பெண் மீட்பு

வனத்தில் சிக்கிய பெண் மீட்பு


ADDED : செப் 26, 2024 06:26 AM

Google News

ADDED : செப் 26, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகன்னடா: உத்தரகன்னடா, தான்டேலியின், அம்பிகா நகரில் வசிப்பவர் பாத்திமா, 50.

இவர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, காளான் கொண்டு வர, வனப்பகுதிக்குச் சென்றிருந்தார். வழி மாறிச் சென்றதில், அவர் வீடு திரும்பவில்லை.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பீதியடைந்த குடும்பத்தினர், அவரைத் தேடத் துவங்கினர்.

கண்டுபிடிக்க முடியாததால், அம்பிகாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், வனத்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன், வனத்தில் பாத்திமாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குளகி சாலையோர வனப்பகுதியில், இரவு 10:30 மணிக்கு அவரை கண்டுபிடித்து, அம்பிகா நகருக்கு அழைத்து வந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அவரை கண்டுபிடித்திருக்கா விட்டால், வன விலங்குகளால் அபாயம் ஏற்பட்டிருக்கும்.

போலீசார், வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்ததால், அவர் உயிர் பிழைத்தார்.






      Dinamalar
      Follow us