மருத்துவமனையில் இருந்து ரிசர்வ் வங்கி கவர்னர் டிஸ்சார்ஜ்!
மருத்துவமனையில் இருந்து ரிசர்வ் வங்கி கவர்னர் டிஸ்சார்ஜ்!
UPDATED : நவ 26, 2024 07:08 PM
ADDED : நவ 26, 2024 08:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ்; 67 வயதாகும் இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர். ஆனால், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழக அரசில் பல துறைகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதம் தாசின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நலமாக உள்ளார்
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்செரிச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.