sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போதை பொருள் கடத்தல் தகவல் கொடுத்தால் பரிசு

/

போதை பொருள் கடத்தல் தகவல் கொடுத்தால் பரிசு

போதை பொருள் கடத்தல் தகவல் கொடுத்தால் பரிசு

போதை பொருள் கடத்தல் தகவல் கொடுத்தால் பரிசு


ADDED : நவ 30, 2024 08:40 PM

Google News

ADDED : நவ 30, 2024 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:“போதைப் பொருள் கடத்தல் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து தகவல் தருவோருக்கு பரிசு வழங்கப்படும். தகவல் தருவோர் குறித்த விபரம் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். இதற்காக கலால் மற்றும் வரித்துறைக்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்,”என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறினார்.

ஹரியானா மாநில கலால் மற்றும் வரிவிதிப்புத் துறை ஆய்வுக் கூட்டம், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடந்தது.

அப்போது, அதிகாரிகளிடம் சைனி பேசியதாவது:

ஹரியானா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப்பொருள் கடத்தல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க பிரத்யேக இணையதளம் உருவாக்க வேண்டும். தகவல் தருவோர் குறித்த விபரத்தை ரகசியமாக வைத்துக் கொள்வதோடு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த அதிரடி நடவடிக்கையை கலால், வரி விதிப்புத் துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் போலீஸ் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.

அதேபோல வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத மதுபானம் ஆகியவற்றை தடுக்க கலால் மற்றும் வரிவிதிப்புத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் தருவோருக்கு பரிசு வழங்க முதற்கட்டமாக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us