sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய நகரங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து : ஜி.கே.பிள்ளை கவலை

/

இந்திய நகரங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து : ஜி.கே.பிள்ளை கவலை

இந்திய நகரங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து : ஜி.கே.பிள்ளை கவலை

இந்திய நகரங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து : ஜி.கே.பிள்ளை கவலை


ADDED : ஜூலை 29, 2011 11:10 PM

Google News

ADDED : ஜூலை 29, 2011 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : 'இந்திய நகரங்களின் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் ஆபத்து உள்ளது' என, முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய, நவம்பர் 26 தாக்குதல் வழக்கில், பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கு நகராமல் இருப்பது வருத்தத்திற்குரியது. காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, இரு நாட்டு மக்களும் பயனடையும் வகையில் வர்த்தக பரிமாற்றம் நடத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதில், வர்த்தக பொருட்கள் யாருடையவை என்பது அடையாளப் படுத்தப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அதன் பயன் மக்களை சென்றடையும். எதிர்காலத்தில் இந்திய நகரங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது. நகரங்கள் புதிய வகையிலான குற்றங்களை சந்திக்கும் நிலையில் உள்ளன. நாட்டில் வேலையின்மையை குறைத்தாலே இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ஜி.கே.பிள்ளை கூறினார்.

இதனிடையே, அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கவுர், ''மும்பை தாக்குதல் விவகாரத்தில், நீதி விசாரணை மேற்கொள்வதற்கான நடைமுறைக்கு கால அவகாசம் தேவை. எனினும், இந்த வழக்கை விரைந்து முடிக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது'' என, தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us