sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

6 ஆண்டுகளாக ஆன்லைனில் ரூ.1.15 கோடி பறிப்பு

/

6 ஆண்டுகளாக ஆன்லைனில் ரூ.1.15 கோடி பறிப்பு

6 ஆண்டுகளாக ஆன்லைனில் ரூ.1.15 கோடி பறிப்பு

6 ஆண்டுகளாக ஆன்லைனில் ரூ.1.15 கோடி பறிப்பு


ADDED : ஜூலை 03, 2025 12:40 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பையில், வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி, மூதாட்டியிடம் ஆறு ஆண்டுகளாக 1.15 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மஹாராஷ்டிராவின் மும்பை ஒர்லி பகுதியில், 70 வயது மூதாட்டி வசிக்கிறார். அரசு ஊழியரான இவரது கணவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், கடந்த 2019 மே மாதம் மூதாட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெண், தான் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி பேசிஉள்ளார்.

அப்போது, இறந்த உங்கள் கணவரின் பணத்தை எங்கள் அலுவலகம் திருப்பி தர முடிவு செய்துள்ளது. ஆனால் உங்கள் கணவர் வரி பாக்கி வைத்திருப்பதால், நாங்கள் தரும் வங்கி கணக்கில் அந்த தொகையை செலுத்தும்படி கூறியுள்ளார்.

இதை நம்பி அந்த மூதாட்டி, கடந்த ஆறு ஆண்டுகளாக, 50 முறை அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். இவ்வாறு, 1.15 கோடி ரூபாய் செலுத்திய பிறகும் வருமான வரித்துறையிடம் இருந்து மூதாட்டிக்கு எந்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை.

இது குறித்து உறவினரிடம் தெரிவித்ததை அடுத்து அவர் தந்த ஆலோசனைப்படி, தாதர் போலீசில் மூதாட்டி புகார் அளித்தார். மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us