sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 விபத்தில் இறந்த இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம்

/

 விபத்தில் இறந்த இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம்

 விபத்தில் இறந்த இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம்

 விபத்தில் இறந்த இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம்


ADDED : நவ 26, 2025 02:19 AM

Google News

ADDED : நவ 26, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: விபத்தில் உயிரிழந்த 22 வயது பெண்ணின் பெற்றோருக்கு, 24 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப் பாயம் உத்தரவிட்டுள்ளது .

புதுடில்லியைச் சேர்ந்த ஷில்பா,22, தன் தோழி அஞ்சலி மற்றும் நண்பர் ரோஹித் ஆகியோருடன், 2020ம் ஆண்டு டிச.,7ம் தேதி பைக்கில் சென்றார். நண்பர் ரோஹித் வண்டியை ஓட்டினார். தோழியர் இருவரும் பின் னால் அமர்ந்து இருந்தனர்.

அதிவேகமாகவும், வளைத்து நெளித்தும் ரோஹித் வண்டியை ஓட்டினார். திடீரென நிலைதடுமாறி வண்டி சாலையில் சரிந்து மூவரும் பலத்த காயம் அடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த ஷில்பா, அதே இடத்தில் உயிரிழந்தார்.

இழப்பீடு கோரி ஷில்பாவின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய தலைமை அதிகாரி ருச்சிகா சிங்லா விசாரித்தார் .

விசாரணை முடிவடைந்த நிலையில், ஷில்பாவின் பெற்றோருக்கு 24.75 லட்சம் இழப்பீடு வழங்கவும், ரோஹித் ஓட்டிச் சென்ற பைக் வேறொருவருக்கு சொந்தமானது என்பதால், வண்டியை ஓட்டிய ரோஹித் மற்றும் வண்டியின் உரிமையாளர் இருவரும் இணைந்து இந்த தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us