sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செக்யூரிட்டி கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம் பரிசு

/

செக்யூரிட்டி கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம் பரிசு

செக்யூரிட்டி கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம் பரிசு

செக்யூரிட்டி கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம் பரிசு


ADDED : செப் 04, 2025 12:21 AM

Google News

ADDED : செப் 04, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:மூணாறு அருகே செக்யூரிட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

கன்னிமலை எஸ்டேட், பாக்டரி டிவிஷனைச் சேர்ந்த ராஜபாண்டி 68, தனியார் ஏஜென்சி மூலம் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். சொக்கநாடு எஸ்டேட் தேயிலை பாக்டரியில் ஆக.,23ல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

டி.எஸ்.பி., அலெக்ஸ்பேபி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இடுக்கியைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்தில் சோதனையிட்டும், கொலை நடந்த பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

கொலை நடந்து 13 நாட்கள் ஆகியும் எவ்வித துப்பும் கிடைக்காததால், கொலை தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் எனவும் அவர்களது பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மூணாறு டி.எஸ்.பி., 94979 90060, இன்ஸ் பெக்டர் 94979 47169, எஸ்.ஐ., 94979 75363 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.






      Dinamalar
      Follow us