sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.40 லட்சம் மோசடி

/

ரூ.40 லட்சம் மோசடி

ரூ.40 லட்சம் மோசடி

ரூ.40 லட்சம் மோசடி


ADDED : ஆக 20, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரளா, திருச்சூரைச் சேர்ந்த மனோஜ் ஜி.நாயர் நீண்ட காலமாக மூணாறில் வசித்து வருகிறார். தற்போது இவர் நகரில் கோயில் ஒன்றை பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய அரசின் பிரபல எண்ணெய் நிறுவனம் சார்பில் காஸ் ஏஜன்சி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக 'ஆன்லைன்' வாயிலாக அறிந்தார். அதற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கையெழுத்து, சீல் உட்பட ஆவணங்கள் அசல் போன்று இருந்ததால், அவற்றை உண்மை என மனோஜ் எண்ணினார். அதனால் எண்ணெய் நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட ரூ.40 லட்சத்தை பல தவணையாக வங்கி மூலம் பட்டுவாடா செய்தார்.

அதன்பிறகு எவ்வித தகவலும் இல்லாததால் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனத்திற்கு நேரடியாக சென்றார். அங்கு விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டது மனோஜ்க்கு தெரியவந்தது. அவர், மூணாறு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரிக் கின்றனர்.






      Dinamalar
      Follow us