கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
UPDATED : ஏப் 24, 2025 05:51 PM
ADDED : ஏப் 24, 2025 09:31 AM

கடலூர்: கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, நவீத் அன்வர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் பஸ்சில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடலூரில் பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, பணத்தை எடுத்து சென்ற நவீத் அன்வர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் பணம் சிக்கியது. ஹவாலா பணத்தை போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த பணத்தை அனுப்பி வைத்தவர் யார், யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி, போலீஸ் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.