sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆபீஸ் போகாத அம்மாக்களுக்கு சிக்கிமில் ஆண்டுக்கு ரூ.40,000

/

ஆபீஸ் போகாத அம்மாக்களுக்கு சிக்கிமில் ஆண்டுக்கு ரூ.40,000

ஆபீஸ் போகாத அம்மாக்களுக்கு சிக்கிமில் ஆண்டுக்கு ரூ.40,000

ஆபீஸ் போகாத அம்மாக்களுக்கு சிக்கிமில் ஆண்டுக்கு ரூ.40,000

1


ADDED : ஆக 11, 2025 11:35 PM

Google News

1

ADDED : ஆக 11, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்டாக்: சிக்கிமில், குடும்பத் தலைவியாக வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு, ஆண்டுதோறும் 40,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் துவக்கி வைத்தார்.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சி நடக்கிறது.

இங்கு, அம்மாக்களின் தியாகங்கள், வலிமை, உழைப்பு, பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஆக., 10ல், 'ஆமா சம்மான் திவஸ்' எனப்படும் அம்மாக்கள் தினம் கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், ஆமா சம்மான் திவஸ் திட்டத்தின் கீழ், வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு இரு கட்டங்களாக தலா 20,000 ரூபாய் என, ஆண்டுதோறும் 40,000 ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

பாக்யோங் மாவட்டத்தில் உள்ள ரங்போ விளையாட்டு மைதானத்தில், ஆமா சம்மான் தின கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், 32,000 பெண்களுக்கு, முதற்கட்டமாக, 20,000 ரூபாய் காசோலைகளை வழங்கி, முதல்வர் பிரேம் சிங் தமாங் பேசியதாவது:

ஆமா சம்மான் தினத்தை கொண்டாட முடிவு செய்ததற்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணமுள்ளது. சிக்கிமின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில், குறிப்பாக கடினமான காலங்களில் அம்மாக்கள் எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

மேலும், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று அவர்கள் தியாகம் செய்துள்ளனர். எங்கள் கட்சியின் பயணம் சிக்கிம் முழுதும் உள்ள அம்மாக்களின் தைரியத்தையும், உறுதியான மனநிலையையும் பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us