sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ரூ.44 கோடி உயர் தர கஞ்சா மும்பை ஏர்போர்ட்டில் பறிமுதல்

/

 ரூ.44 கோடி உயர் தர கஞ்சா மும்பை ஏர்போர்ட்டில் பறிமுதல்

 ரூ.44 கோடி உயர் தர கஞ்சா மும்பை ஏர்போர்ட்டில் பறிமுதல்

 ரூ.44 கோடி உயர் தர கஞ்சா மும்பை ஏர்போர்ட்டில் பறிமுதல்

1


ADDED : மார் 05, 2026 02:56 AM

Google News

ADDED : மார் 05, 2026 02:56 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 44 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்தர கஞ்சா மற்றும் வைரங்கள், தங்க நகைகள் என 46 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரத்தில் வந்த ஒன்பது பயணியரிடம் சுங்கத்துறை யினர் அதிரடி சோதனை நடத்தினர்.

வெவ்வேறு நாட்களில் நடந்த சோதனைகளில் 44.292 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு 44.292 கோடி ரூபாய். கடத்தலில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இது தவிர 299 கிராம் மெத்தாகுவலோன் என்ற போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு 74.75 லட்சம் ரூபாய். இது தவிர ஐந்து தனித்தனி சம்பவங்களில் 32.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 94.97 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் 21.51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் உட்பட மொத்தம் 46 கோடி ரூபாய் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us