ADDED : ஏப் 19, 2024 07:09 PM

மும்பை: யெஸ் வங்கி மோசடி வழக்கில் அதன் நிறுவனர் ராணா கபூருக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, 'யெஸ் பேங்க்' நிறுவனர் ராணா கபூர், 'தீவான் ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர், 5,000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கு தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதில் ரூ. 466 கோடி பண மோசடி செய்த தொடர்பாக 2020 மார்ச்சில் ராணா கபூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் தீவான் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த வாத்வான் சகோதரர்கள், முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த வழக்கு, யெஸ் பேங்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஜாமின் கோரி சிறப்பு கோர்ட்டில் ராணாகபூர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

