sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.60 கோடி பணமோசடி; நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு

/

ரூ.60 கோடி பணமோசடி; நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு

ரூ.60 கோடி பணமோசடி; நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு

ரூ.60 கோடி பணமோசடி; நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு


UPDATED : ஆக 14, 2025 09:55 AM

ADDED : ஆக 14, 2025 09:51 AM

Google News

UPDATED : ஆக 14, 2025 09:55 AM ADDED : ஆக 14, 2025 09:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ரூ.60 கோடி பணமோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தா மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர், 2015 - 2023 காலகட்டத்தில் ரூ.60.48 கோடி கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் இந்தப் பணத்தை தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ராஜேஷ் ஆர்யா என்ற ஏஜென்டின் மூலம் அணுகிய ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா, 75 கோடி கடனை 12% வட்டியுடன் அணுகினர். இந்த அதிக வட்டியை தவிர்க்க, இதை 'முதலீடு' என்று மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அதனை கேட்டு, கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தவணையாக ரூ.31.95 கோடியும், 2வது தவணையாக ரூ.28.54 கோடியும் கொடுத்துள்ளார். இந்த சூழலில், கடந்த 2016ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார்.

அதன்பிறகு, அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என்று கோத்தாரி குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, ஜூஹு போலீஸ் ஸ்டேஷனில் கோத்தாரி புகார் அளித்தார். அதனடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவால் விசாரிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us