sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயிலில் கடத்தி வந்த பணம் ரூ.60 லட்சம் பறிமுதல்

/

ரயிலில் கடத்தி வந்த பணம் ரூ.60 லட்சம் பறிமுதல்

ரயிலில் கடத்தி வந்த பணம் ரூ.60 லட்சம் பறிமுதல்

ரயிலில் கடத்தி வந்த பணம் ரூ.60 லட்சம் பறிமுதல்


ADDED : மே 01, 2025 01:41 AM

Google News

ADDED : மே 01, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், கடத்தி வந்த, 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நடைமேடையில் காத்திருந்த இருவரை சோதனையிட்டனர். அவர்களது பையில், 60 லட்சம் ரூபாய் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

விசாரணையில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மஷேந்திரா ராவாஸ்ஹேப் தேவத்கர், 41, சவுரா அனுஸ், 22, என்பது தெரிந்தது. எர்ணாகுளம் பகுதிக்கு பணத்தை ரயிலில் கடத்திச் செல்லும் வழியில் இருவரும் சிக்கியுள்ளனர்.

பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், விசாரணைக்காக இருவரையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us