ரூ.750 கோடி கடன் வாங்கி மோசடி : சமாஜ்வாதி பிரமுகர் வீட்டில் ரெய்டு
ரூ.750 கோடி கடன் வாங்கி மோசடி : சமாஜ்வாதி பிரமுகர் வீட்டில் ரெய்டு
ADDED : பிப் 23, 2024 08:58 PM

லக்னோ
: உத்தர பிரதேசத்தில், 750 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி
வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., வினய் ஷங்கர்
திவாரிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்
துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
உத்தர
பிரதேசத்தில், சாலை கட்டுமான பணி மற்றும் சுங்க சாவடி
பராமரிப்பு பணிகளில் கங்கோத்ரி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம்
ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனம், கடந்த 2012 முதல் 2016 வரையிலான
கால கட்டத்தில், பாங்க் ஆப் இந்தியாவின் கீழ் செயல்படும் ஏழு
வங்கிகளில் 1,129 கோடி ரூபாய் கடன் பெற்றது. அதில் ஒரு பகுதி மட்டுமே
திருப்பி செலுத்தப்பட்டது. இதனால், வங்கிகள் கூட்டமைப்புக்கு 754 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து,
பணமோசடி வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்
துறையினர், இது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டனர். இதன் ஒரு
பகுதியாக, கங்கோத்ரி நிறுவனத்தின் முக்கிய பிரமுகரான சமாஜ்வாதி
கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-., வினய் ஷங்கர் திவாரிக்கு
சொந்தமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்
துறையினர் சோதனை நடத்தினர்.
உ.பி..யில் லக்னோ, கோரக்பூர்
மற்றும் நொய்டா, குஜராத்தில் ஆமதாபாத், ஹரியானாவில் குருகிராம்
உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள்
சோதனை நடத்தினர்.