sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.8 கோடி நகை திருடியவர் கைது

/

ரூ.8 கோடி நகை திருடியவர் கைது

ரூ.8 கோடி நகை திருடியவர் கைது

ரூ.8 கோடி நகை திருடியவர் கைது


ADDED : பிப் 08, 2025 06:27 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலசூரு கேட்: வேலை செய்த நகைக் கடையில் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு ஹலசூரு கேட்டில் நகைக்கடை வைத்திருப்பவர் விக்ரம். இவரது நகைக் கடையில், உத்தர பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த நரேஷ் சர்மா வேலை செய்தார். விக்ரம் தமிழகத்திலும் நகை விற்பனை செய்தார்.

தன் நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததால் நரேஷ் சர்மாவிடமும் நகைகளை விற்னை செய்து வர கொடுப்பது வழக்கம்.

கடந்த மாதம் 8ம் தேதி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான, நகைகளுடன் தமிழகத்தின் கோவைக்கு நரேஷ் சர்மா சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

நகைகளை திருடியதாக நரேஷ் மீது ஹலசூரு கேட் போலீசில், விக்ரம் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நரேஷை தேடினர்.

லக்னோவில் கடந்த 5ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அங்கு உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை பெங்களூருக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அவரிடம் இருந்து தற்போதைக்கு 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us