sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலை பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு; தரிசனத்துக்கு செல்வோருக்கு கட்டுப்பாடு!

/

சபரிமலை பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு; தரிசனத்துக்கு செல்வோருக்கு கட்டுப்பாடு!

சபரிமலை பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு; தரிசனத்துக்கு செல்வோருக்கு கட்டுப்பாடு!

சபரிமலை பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு; தரிசனத்துக்கு செல்வோருக்கு கட்டுப்பாடு!

7


ADDED : அக் 06, 2024 08:46 AM

Google News

ADDED : அக் 06, 2024 08:46 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்; சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

பூஜை காலத்தில் தினமும் 80,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். இணையம் மூலம் முன்பதிவு செய்யும் போது எந்த வழியாக யாத்திரையை மேற்கொள்வது என்பதை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.

இம்முறை நிலக்கல், பம்பை பகுதிகளில் கூடுதல் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் நிறைவு பெற உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us