sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சபரிமலை நடை இன்று அடைப்பு

/

 சபரிமலை நடை இன்று அடைப்பு

 சபரிமலை நடை இன்று அடைப்பு

 சபரிமலை நடை இன்று அடைப்பு


ADDED : ஜன 20, 2026 04:36 AM

Google News

ADDED : ஜன 20, 2026 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: சபரிமலையில் மகர விளக்கு சீசன் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படுகிறது.

சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நவ., 16 மாலை நடை திறக்கப்பட்டு, டிச., 27 இரவு அடைக்கப்பட்டது. மூன்று நாள் இடைவெளிக்கு பின்னர் டிச.,30 மாலை நடைதிறந்து மகர விளக்கு கால சீசன் தொடங்கியது.

ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெற்றது. ஜன.,18-ல் நெய் அபிஷேகம் நிறைவு பெற்றது.

நேற்று மாளிகைப்புறம் மணிமண்டபம் முன்பு குருதி பூஜை நடை பெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு பக்தர்களின் தரிசனம் நிறைவு பெற்றது.

மகரஜோதிக்கு பின்னரும் சபரிமலையில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் காலை 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படுகிறது.

அதன் பின்னர் மாசி மாத பூஜை களுக்காக பிப்., 12-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படு ம்.






      Dinamalar
      Follow us