sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் ஜனாதிபதியை சந்தித்தார் சச்சின்

/

டில்லியில் ஜனாதிபதியை சந்தித்தார் சச்சின்

டில்லியில் ஜனாதிபதியை சந்தித்தார் சச்சின்

டில்லியில் ஜனாதிபதியை சந்தித்தார் சச்சின்


ADDED : பிப் 06, 2025 06:29 PM

Google News

ADDED : பிப் 06, 2025 06:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருடன் டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை பரிசாக ஜனாதிபதியிடம் கொடுத்தார்.

தற்போது 51 வயதாகும் சச்சின் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதில் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒரு நாள் போட்டிகள் அடக்கம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்கள், ஒரு நாள் போட்டியில் 18,426 ரன்கள் குவித்து என பல்வேறு சாதனைகளை அவர் படைத்து உள்ளார். இதற்காக அவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பி.சி.சி.ஐ.,யின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.

இந்நிலையில், இன்று அவர் ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சச்சின் டெண்டுல்கர் அவருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில் கையெழுத்து போட்டு, அதனை பரிசாக முர்முவிடம் அளித்தார். அப்போது, சச்சின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us