sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை தாக்கிய வங்கதேசத்தைச் சேர்ந்த குற்றவாளி கைது

/

பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை தாக்கிய வங்கதேசத்தைச் சேர்ந்த குற்றவாளி கைது

பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை தாக்கிய வங்கதேசத்தைச் சேர்ந்த குற்றவாளி கைது

பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை தாக்கிய வங்கதேசத்தைச் சேர்ந்த குற்றவாளி கைது

17


UPDATED : ஜன 19, 2025 01:30 PM

ADDED : ஜன 19, 2025 06:25 AM

Google News

UPDATED : ஜன 19, 2025 01:30 PM ADDED : ஜன 19, 2025 06:25 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: நடிகர் சயீப் அலிகானை அவரது மும்பை இல்லத்தில் கத்தியால் குத்திய நபர் மஹா., மாநிலம் தானேயில் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலி கான் வீட்டுக்குள் கடந்த ஜன., 16ம் தேதி அதிகாலை புகுந்த மர்ம நபர், அவரை ஆறு முறை கத்தியால் குத்தி தப்பி ஓடினார்.

இதில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை, இரு நாட்களுக்கு பின், சத்தீஸ்கரின் துர்க் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், நடிகர் சயீப் அலிகானை அவரது மும்பை இல்லத்தில் கத்தியால் குத்திய நபர் மஹா., மாநிலம் தானேயில் கைது செய்யப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என தெரியவந்துள்ளது.

இவர், மதுபான விடுதியில் வேலை பார்த்து வந்தார் என்பது தெரியவந்தது. ஜனவரி 16ம் தேதி மும்பை வீட்டில் சயீப் அலிகானை கத்தியால் குத்தியதாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக முகமது அலியனை போலீசார் பாந்த்ராவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

வங்கதேசத்தை சேர்ந்தவன்

இது தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் கூறியதாவது: கைது செய்யப்பட்ட குற்றவாளி முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது. அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சில பொருட்கள் இதனை உறுதி செய்கின்றன. அவன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை. இதனால், அவன் வங்கதேசத்தைச் சேர்ந்தவன் ஆக இருக்க முடியும் என்பதால், பாஸ்போர்ட் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்த அவன், இங்கு வந்ததும் பிஜோய் தாஸ் என பெயர் மாற்றிக் கொண்டுள்ளான். கடந்த நான்கு மாதங்களாக மும்பையில் வசித்து வரும் இவன், வீடு துப்புறவு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளான். கொள்ளை அடிக்கவே சயீப் அலிகான் வீட்டிற்கு வந்துள்ளான். தானேவில் கைது செய்யப்பட்ட அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கிடையே, சயீப் அலி கான் குணமடைந்து வருவதால், இரண்டு அல்லது மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us