sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தடையை மீறி செல்ல முயற்சி; ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய உ.பி., போலீஸ்!

/

தடையை மீறி செல்ல முயற்சி; ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய உ.பி., போலீஸ்!

தடையை மீறி செல்ல முயற்சி; ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய உ.பி., போலீஸ்!

தடையை மீறி செல்ல முயற்சி; ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய உ.பி., போலீஸ்!

21


UPDATED : டிச 04, 2024 01:15 PM

ADDED : டிச 04, 2024 11:31 AM

Google News

UPDATED : டிச 04, 2024 01:15 PM ADDED : டிச 04, 2024 11:31 AM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சம்பல்: உ.பி. மாநிலம், சம்பல் செல்ல முயன்ற ராகுலை, போலீசார் காருடன் தடுத்து நிறுத்தினர்.

உ.பி. மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள மசூதியை கோர்ட் உத்தரவுப்படி தொல்லியல் துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது உள்ளூர் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் அது வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர்.

சம்பல் பகுதியில் தொடர்ந்து அசாதாரண நிலை காணப்படுவதால் அங்கு வெளி நபர்கள் நுழைய டிச.10 வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் சம்பல் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் இன்று செல்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, புதுடில்லி-மீரட் சாலையில் காசிப்பூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ராகுலும், பிரியங்காவும் அங்கு வந்த போது அவர்களின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். உத்தரப்பிரதேசத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை போலீசார் தடுத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் கண்காணிப்பை போலீசார் பலப்படுத்தி இருக்கின்றனர்.

ராகுல், பிரியங்கா பேட்டி

இது குறித்து ராகுல் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவராக செல்லும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேச காங்கிரஸ் விரும்புகிறது. அடிப்படை உரிமைகளை பா.ஜ., நசுக்குகிறது. காங்கிரசின் போராட்டம் தொடரும் என்றார்.

பிரியங்கா கூறியதாவது: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு. சம்பல் நகருக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us