நகை வியாபாரியை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்
நகை வியாபாரியை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்
ADDED : ஆக 08, 2024 05:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: லஞ்சம் பெற்ற வழக்கில் டில்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவை சிபிஐ கைது செய்தது.
மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தரவில்லை என்றால் கைது செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
சந்தீப் சிங் யாதவ் கேட்ட தொகையை நகைக்கடை வியாபாரியால் தர முடியவில்லை. இதனால் ரூ.20 லட்சம் தருமாறு பேரம் பேசியுள்ளார். அந்த ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை சந்தீப் சிங் யாதவ் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

