sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சந்தேஷ்காலி விவகாரம்: சி.பி.ஐ., காவலில் ஷாஜஹான் ஷேக்

/

சந்தேஷ்காலி விவகாரம்: சி.பி.ஐ., காவலில் ஷாஜஹான் ஷேக்

சந்தேஷ்காலி விவகாரம்: சி.பி.ஐ., காவலில் ஷாஜஹான் ஷேக்

சந்தேஷ்காலி விவகாரம்: சி.பி.ஐ., காவலில் ஷாஜஹான் ஷேக்


UPDATED : மார் 06, 2024 07:02 PM

ADDED : மார் 06, 2024 06:52 PM

Google News

UPDATED : மார் 06, 2024 07:02 PM ADDED : மார் 06, 2024 06:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் சந்தேஷ்காலி விவகாரத்தில் ஆளும் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கை ஐகோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்த துவங்கியது.

மேற்கு வங்கத்தின், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினரின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனால், சந்தேஷ்காலியில் கடந்த ஜனவரியில் நடந்த தொடர் வன்முறை சம்பவங்களால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே ஷாஜஹான் ஷேக் மீது பல்வேறு தரப்பு பெண்கள் புகார் கூறியதையடுத்து அவர் சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரி கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஹரீஷ் டாண்டன், ஹிரன்மே பட்டாச்சார்யா ஆகியோர் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் மேற்குவங்க சி.ஐ.டி., போலீசில் ஆஜராக வந்த ஷாஜஹான் ஷேக்கை சி.பி.ஐ., தங்கள் கஸ்டிக்கு அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us