sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சந்தேஷ்காலி சம்பவம் : ஆளும் திரிணமுல் காங், பிரமுகர் கைது

/

சந்தேஷ்காலி சம்பவம் : ஆளும் திரிணமுல் காங், பிரமுகர் கைது

சந்தேஷ்காலி சம்பவம் : ஆளும் திரிணமுல் காங், பிரமுகர் கைது

சந்தேஷ்காலி சம்பவம் : ஆளும் திரிணமுல் காங், பிரமுகர் கைது

5


ADDED : பிப் 17, 2024 08:58 PM

Google News

ADDED : பிப் 17, 2024 08:58 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: 'மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ரவுடி கும்பல் அராஜகம் செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்., பிரமுகர் ஷிபு பிரசாத் ஹஸ்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜகான் ஷேக் என்பவரும் இவரது கூட்டாளிகளும் அப்பகுதியினரிடம் பலவந்தமாக நிலங்களை அபகரித்துக்கொண்டும், அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி, சந்தேஷ்காலி பகுதி வாழ் பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை மம்தா அரசும் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற மாநில பா.ஜ., தலைவர் சுகந்தா மஜும்தார், போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சட்டத்தை காப்பாற்றும் போலீசார், ரவுடிகளுடன் கைகோர்த்துக் கொண்டு அங்கு அடக்குமுறையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் பெரிதானதால் அரசு நடவடிக்கை எடுத்தது, இதையடுத்து ஷிபு பிரசாத் ஹஸ்ரா என்ற திரிணமுல் காங், பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இவர் ரவுடி கும்பல் தலைவனான ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளி என தெரியவந்தது.






      Dinamalar
      Follow us