ADDED : நவ 16, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இதுவரை இல்லாத பெரிய கடன் தொகையாக, 10,500 கோடி ரூபாய், அதாவது, 125 கோடி டாலர் கடன் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.பி.ஐ.,க்கு இந்த கடனை பெற்றுத் தருவதில், 'எச்.எஸ்.பி.சி., ஹோல்டிங்ஸ், சி.டி.பி.சி., பாங்க், தைபே பியூபான் வங்கி' ஆகியவை ஈடுபட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய இந்தக் கடன் குறித்து எஸ்.பி.ஐ., தரப்பில் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
வங்கிகளை பொறுத்தவரை, 75 கோடி டாலர் கடன் தான் இதுவரை அதிகபட்சமாக பெற்ற கடனாக இருந்தது. இதற்கு முன், 'பாங்க் ஆப் பரோடா' 75 கோடி டாலர் கடன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.