sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜார்க்கண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு: மத்திய விவசாயத்துறை அமைச்சர் உறுதி

/

ஜார்க்கண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு: மத்திய விவசாயத்துறை அமைச்சர் உறுதி

ஜார்க்கண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு: மத்திய விவசாயத்துறை அமைச்சர் உறுதி

ஜார்க்கண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு: மத்திய விவசாயத்துறை அமைச்சர் உறுதி

3


UPDATED : செப் 23, 2024 07:18 PM

ADDED : செப் 23, 2024 07:11 PM

Google News

UPDATED : செப் 23, 2024 07:18 PM ADDED : செப் 23, 2024 07:11 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: 'ஜார்க்கண்ட்டில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் உணவு, பெண்கள் மற்றும் நிலங்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்,' என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

ஜார்க்கண்ட் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: நான் மேடையில் பேசும்போது பல்வேறு பெண்கள், மாநிலத்தின் மண்ணை பாக்கெட்டில் எடுத்து வந்து என்னிடம் கொடுத்தனர். உணவு, பெண்கள், நிலத்திற்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜ., உங்களுக்கு அந்த பாதுகாப்பை உறுதியாக அளிக்கும்.

மாநிலத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளது. ஹேமந்த் சோரன் தலைமையிலான மாநில அரசு, அதற்கு அனுமதி அளிக்கிறது. ஊடுருவல்காரர்கள், இங்கே வேலைவாய்ப்பினை எடுத்துகொள்கிறார்கள், அதனால் இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் சோதனைக்குள்ளாகிறது. பா.ஜ., அரசு அமைந்ததும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாப்புக்கு உறுதி அளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us