காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் மோதல்
ADDED : ஆக 24, 2024 06:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டுஉள்ளது.
சோபோர் மாவட்டத்தின் வாடர்கேம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுதது ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் அங்கு சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.