
பிரதமர் மோடியின் வருகைக்கு பின், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக கூட்டுத் தாக்குதலை துவங்கியுள்ளன. அவர், இஸ்ரேல் சென்றது கோழைத்தனமான செயல்; அந்நாட்டுடன் துணை நிற்போம் என கூறியது அதைவிட வெட்கக்கேடானது. அவரது நெருங்கிய நண்பர்கள் என பல முறை அழைத்த இரண்டு தலைவர்களால் தான் இப்போது போர் துவங்கப்பட்டுள்ளது.
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்.,
நம்பிக்கை வையுங்கள்!
காங்கிரசும், அதன் தலைவர்களும் ஒவ்வொரு முக்கிய விவகாரத்திலும், எதிர்மறையான கருத்துகளை கூறுவதை இயல்பாக கொண்டுள்ளனர். குழந்தைத்தனமான அறிக்கைகளை அந்தக் கட்சியினர் வெளியிடுவதை தவிர்த்து, மத்திய அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் துவங்கியிருப்பது வருத்தமளிக்கிறது.
கவுரவ் பாத்தியா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
ஏன் வாபஸ் பெற்றார்?
பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை விசாரணை நீதிமன்றம் விடுவித்த பின், உயர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது. இதேபோல் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலும் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தண்டனை கிடைக்கும். நிரபராதி என்றால், புதிய கொள்கையை ஏன் வாபஸ் பெற்றார் என்பதை விளக்க வேண்டும்.
ஆர்.பி.சிங் செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

