sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமருக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!

/

பிரதமருக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!

பிரதமருக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!

பிரதமருக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!

15


UPDATED : மார் 19, 2025 06:29 PM

ADDED : மார் 19, 2025 05:28 PM

Google News

UPDATED : மார் 19, 2025 06:29 PM ADDED : மார் 19, 2025 05:28 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் மீண்டும் பாராட்டியிருப்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். இதனால் இவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பாளர்கள் அதிகம். முன்னாள் மத்திய அமைச்சரான இவர், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பை பாராட்டினார். இதற்கு காங்., கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசை பாராட்டிய சசிதரூர், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமையை மேலும் வெறுப்பேற்றினார்.

இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் மீண்டும் பாராட்டி உள்ளார்.

இது குறித்து சசி தரூர் கூறுகையில், 'கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்தவர்களில் நானும் ஒருவன். அதனால், ஏற்பட்ட கரையை இன்னமும் நான் துடைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். உக்ரைன், ரஷ்யா அதிபர்களை கட்டித் தழுவிய பிரதமர் மோடி, சமாதானத்தை வலியுறுத்தினார்,' என்றார்.

இதன்மூலம், ஒரே மாதத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் 2வது முறையாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து பா.ஜ., ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறுகையில், ' சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் அந்தஸ்தை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டதை பார்க்கையில் திருப்தியளிக்கிறது. சசிதரூரின் கருத்தால் ராகுலின் முகம் சிவந்து போயிருக்கும். பிரதமரை பாராட்டிய சசிதரூர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காது என்று நம்புகிறேன்,' எனக் கூறினார்.

சசி தரூர் இப்படி தொடர்ந்து பிரதமரை பாராட்டி வருவது, காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us