sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: மாந்த்ரீகம் செய்ததாக கூறி 5 பேர் உயிரோடு எரித்துக்கொலை

/

பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: மாந்த்ரீகம் செய்ததாக கூறி 5 பேர் உயிரோடு எரித்துக்கொலை

பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: மாந்த்ரீகம் செய்ததாக கூறி 5 பேர் உயிரோடு எரித்துக்கொலை

பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: மாந்த்ரீகம் செய்ததாக கூறி 5 பேர் உயிரோடு எரித்துக்கொலை

3


ADDED : ஜூலை 07, 2025 09:06 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 09:06 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹார் மாநிலத்தில் மாந்த்ரீகத்தில் ஈடுபட்டதாக கூறி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பீஹார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சதர் பூர்ணியா பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி பங்கஜ் குமார் சர்மா கூறியதாவது:

இன்று அதிகாலை 5 மணிக்கு சோனுகுமார், 16, என்ற சிறுவன் தன் குடும்பத்தினரை கிராம மக்கள் தாக்கி, உயிரோடு எரித்துக் கொன்று விட்டதாக கூறினான்.

நாங்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினோம். இதில், பாபுலால் ஓரோன், சீதா தேவி, மஞ்சித் ஓரோன், அரணியா தேவி, காக்தோ ஆகிய 5 பேரின் எரிந்த உடல்கள் மீட்கப்பட்டன.

இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதே கிராமத்தை சேர்ந்த ராம்தேவ் ஓரோன் என்பவரின் குழந்தை மூன்று நாட்களுக்கு முன் இறந்து விட்டது.

இதற்கு, குறிப்பிட்ட இந்த 5 பேர் குடும்பத்தினர் செய்த மாந்திரீகம் தான் காரணம் என்று கருதி, எரித்து கொன்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us