sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிக வட்டி ஆசை காண்பித்து ரூ.30 கோடியுடன் ஓட்டம்

/

அதிக வட்டி ஆசை காண்பித்து ரூ.30 கோடியுடன் ஓட்டம்

அதிக வட்டி ஆசை காண்பித்து ரூ.30 கோடியுடன் ஓட்டம்

அதிக வட்டி ஆசை காண்பித்து ரூ.30 கோடியுடன் ஓட்டம்


ADDED : பிப் 01, 2025 02:53 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு : அதிக வட்டி ஆசை காண்பித்து, பணம் வசூலித்த நகைக்கடை உரிமையாளர், 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

துமகூரின் குவெம்பு நகரில் குடும்பத்துடன் வசித்தவர் சிவானந்த மூர்த்தி. இவரது மகன் ஆகாஷ், நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார்.

துமகூரு பஸ் நிலையம் எதிரில் உள்ள ஜி.எம்.எஸ்., காம்பிளக்சில் சிவானந்த மூர்த்தி 'ஆகாஷ் ஜுவல்லரி' என்ற பெயரில், நகைக்கடை நடத்தினார். நகைக்கடையுடன் சீட்டு தொழிலும் நடத்தியுள்ளார். சமீபத்தில் கூட்டுறவு சொசைட்டி துவங்கினர்.

நகைக்கடை, கூட்டுறவு சொசைட்டியில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக சிவானந்த மூர்த்தி அறிவித்தார். இதை நம்பிய பலர் முதலீடு செய்தனர். ஆனால் வட்டியும் தரவில்லை. பணத்தை சுருட்டிக் கொண்டு, சிவானந்த மூர்த்தியின் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

பணத்தை இழந்தவர்கள், துமகூரு நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சிவானந்த மூர்த்தி, இவரது மனைவி பூர்ணிமா, மகன் ஆகாஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us