விண்வெளி நாயகன் சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது!
விண்வெளி நாயகன் சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது!
ADDED : ஜன 25, 2026 08:16 PM

புதுடில்லி: விண்வெளி நாயகன் சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக கக்ரா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டின் உயரிய வீரதீர சாகச விருதுகளை வழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி மொத்தம் 70 பேருக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவர்களில் 6 பேர் மரணத்திற்கு பின் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டின் உயரிய வீரதீர விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருதுக்கு சுபான்ஷு சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால்பதித்த முதல் இந்திய விண்வெளி வீரர், 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் சுபான்ஷூ சுக்லா. இவர் நாசாவின் ஆக்ஷசியம் 4 மிஷனில் விண்வெளிக்கு சென்றவர்.
மேஜர் அர்ஷதீப் சிங், சுபேதார் டோலேஷ்வர் சுப்பா, கேப்டன் பிராந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகிய 3 பேருக்கும் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்படுகிறது. இவர்கள் தவிர 13 பேர் சவுஷ்ரியா விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

