sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது: நிதி அமைச்சர் நிர்மலா குற்றச்சாட்டு

/

குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது: நிதி அமைச்சர் நிர்மலா குற்றச்சாட்டு

குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது: நிதி அமைச்சர் நிர்மலா குற்றச்சாட்டு

குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது: நிதி அமைச்சர் நிர்மலா குற்றச்சாட்டு

21


ADDED : டிச 16, 2024 02:17 PM

Google News

ADDED : டிச 16, 2024 02:17 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது. அடக்கு முறையில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஏந்தி தற்போது போராடுகின்றனர்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டி உள்ளார்.



அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின் போது, ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திராவுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்த போது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது. காங்கிரஸ் குடும்பம் அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து திருத்திக் கொண்டே இருந்தது. பெண்களுக்கு எதிரான கொள்கை கொண்டது காங்கிரஸ்.

ஜனநாயகம்

பொருளாதார வளர்ச்சியை காங்கிரஸ் கொள்கை சீர்குலைத்தது. கருத்துச் சுதந்திரம் பற்றி இன்றும் பெருமை பேசும் ஜனநாயக நாடான இந்தியா, இந்தியர்களின் பேச்சுச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலும், அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஓராண்டுக்குள் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முதல் இடைக்கால அரசு கொண்டு வந்தது. ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். அடக்கு முறையில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஏந்தி தற்போது போராடுகின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.






      Dinamalar
      Follow us