sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிவகுமார் முதல்வராவார்: சித்து முன்னிலையில் ஜெயின் முனி ஆரூடம்

/

சிவகுமார் முதல்வராவார்: சித்து முன்னிலையில் ஜெயின் முனி ஆரூடம்

சிவகுமார் முதல்வராவார்: சித்து முன்னிலையில் ஜெயின் முனி ஆரூடம்

சிவகுமார் முதல்வராவார்: சித்து முன்னிலையில் ஜெயின் முனி ஆரூடம்

2


ADDED : ஜன 23, 2025 05:10 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:10 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி: “சிவகுமார், முதல்வர் ஆவது உறுதி,” என, ஜெயின் முனி குனதரநந்தி மஹராஜ் ஆரூடம் கூறியதால், அவரது ஆதரவாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.

ஹூப்பள்ளியின் வரூரின், நவகிரஹ தீர்த்ததலத்தில் மஹா மஸ்தாபிஷேகம் நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சிகளில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், ஜெயின் முனி குணதரநந்தி மஹராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஜெயின் முனி ஆற்றிய உரை:

சிவகுமார் முதல்வராகியே தீருவார். இவர் காங்கிரசுக்காக பட்ட கஷ்டம், கொஞ்சம், நஞ்சமல்ல. சிவகுமார் முதல்வராக வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு உள்ளது. ஜெயினர்களுக்கு கொடுத்து பழக்கம். வேண்டுவது தெரியாது. ஆனால் இப்போது அரசிடம் வேண்டுகிறோம். கார்ப்பரேஷன், வாரியங்களில் ஜெயின் சமுதாயத்தினருக்கு பதவி தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெயின் முனியின் ஆரூடத்தால், சிவகுமார் ஆதரவாளர்கள் குஷி அடைந்துள்ளனர். இவரது ஆசி பலிக்க வேண்டும் என, விரும்புகின்றனர்.

தொடர்ந்து சிவகுமார் பேசியதாவது:

இதற்கு முன்பு வினய் குருஜியும், இதே வார்த்தையை கூறியிருந்தார். இப்போது குணதரநந்தி மஹராஜர் என்னை முதல்வராகும்படி ஆசிர்வதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அகிம்சை, சத்தியம், தியாகத்துக்கு மறுபெயர் ஜெயின் மதம். இந்த சிவகுமார் உங்களுடன் எப்போதும் இருப்பார். என் மீது நம்பிக்கை வையுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விஸ்வநாத் அதிரடி


இதற்கிடையில், பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமாரை, நேற்று பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் சந்தித்துப் பேசினார். பின் அவர் அளித்த பேட்டி:

முதல்வர் சித்தராமையா தேவையின்றி பரப்பி வரும் குழப்பம், காங்கிரசின் பெயரையும், புகழையும் கெடுக்கிறது. காங்கிரசை கட்டியது சித்தராமையா அல்ல. காங்கிரசை உருவாக்கியது யார், என்ன செய்ய வேண்டும் இதெல்லாம் தேவையற்றது.

மாநிலத்தில் 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு சிவகுமாரின் பங்களிப்பு அதிகம். அவர் முதல்வராவது உறுதி. 'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையாவின் கவுரம் பாழாகிவிட்டது. மைசூரு மக்களுக்கு வீடு கட்ட இடம் தரவில்லை. ஆனால், முதல்வர், அமைச்சர்கள் தங்களுக்கு தாங்களே மனைகளை ஒதுக்கிக் கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரிய அவமானம்'

ஜெயின் முனி ஆரூடம் குறித்து, பெங்களூரில் பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கூறியதாவது: மேடையிலேயே சிவகுமார் முதல்வராக வேண்டும் என, ஜெயின்முனி வாழ்த்தியுள்ளார். சித்தராமையாவுக்கு இதைவிட பெரிய அவமானம், வேறு ஒன்றில்லை. சித்தராமையா எதிரிலேயே, காங்கிரஸ் தொண்டர்கள், சிவகுமார் அடுத்த முதல்வர் என, கோஷமிட்டுள்ளனர். சித்தராமையாவை தன்மானம் உள்ளவர் என, நான் நினைத்திருந்தேன். தன்மானத்துடன் அரசியல் செய்வார் என, கருதினேன். என்னை போன்றவர்களுக்கு, இதுபோன்ற அவமதிப்பு நடந்திருந்தால், சகித்திருக்க மாட்டோம். சித்தராமையா எப்படி இந்த அவமதிப்பை சகித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை இப்போதும் எனக்கு புரியவில்லை.யோகம் இருந்தால் யார் வேண்டுமானாலும், முதல்வர் ஆகலாம். ஆனால் யோக்கியதை உள்ளவர்கள் மட்டும், நல்ல முதல்வராக இருப்பர். முதல்வராக யோகம் வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us