ADDED : பிப் 19, 2025 06:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தீப்பற்றிய வீட்டில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த 6 பேர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுடில்லி நங்லாய் ஜனதா மார்க்கெட்டில் உள்ள ஒரு வீட்டில் 17ம் தேதி இரவு 9:45 மணிக்கு தீப்பற்றியது. தீ மளமளவென பற்றியதால், இரண்டாவது மாடியில் இருந்த பிரஞ்சல்,19, பிரீத்தி,40, பங்கஜ்,40, பனவ்,18, வைபவ்,13 மற்றும் ஸ்வேதா,20 அங்கிருந்து குதித்தனர்.
கை, கால்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், 6 பேரும் புஷ்பாஞ்சலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர், மூன்று வண்டிகளில் விரைந்து வந்தனர். இரவு 11:00 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.