sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்

/

குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்

குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்

குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்


ADDED : ஜன 14, 2025 11:01 PM

Google News

ADDED : ஜன 14, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு; மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் குடியிருப்புப் பகுதியில் நேற்று காலை 6:00 மணி வரை படையப்பா நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் மிகவும் பிரபலமான படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரமாக கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நடமாடியது.

பின் தொழிலாளர்கள் குடியிருப்புகள் அருகில் இருந்த வாழைகளை தின்றதுடன், காய்கறி தோட்டங்களையும் சேதப்படுத்தியது.

அந்த யானை நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வாழைகளை தின்றது. காலை 6:00 மணி வரை குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா மக்கள் நடமாட துவங்கியதால் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேறியது.

அச்சம்


அப்பகுதியில் யானை உள்ளதை அறியாமல் நேற்று பொங்கல் என்பதால் அதிகாலை வீட்டின் முன் சிலர் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யானை பலமாக பிளிறியதால் அச்சத்தில் வீட்டினுள் ஓடினர். அதன் பிறகு தான் குடியிருப்பு பகுதியில் யானை நின்றதை பெரும்பாலானோர் அறிந்தனர்.






      Dinamalar
      Follow us