ADDED : மார் 16, 2026 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீரட்: மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில், ஜெய்ல் சுங்கியில் வசித்தவர் ராஜேஷ்,55. அவரது மகன் அமன்,30. இருவரும் நேற்று முன் தினம் இரவு மது அருந்தினர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அமன், செங்கல்லை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தி ல் ராஜேஷ் சரிந்தவுடன் அமன் தப்பி ஓடினார்.
த கவல் அறிந்து வந்த போலீசார், ராஜேஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அமனை கைது செய்தனர்.

