sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொத்து தகராறில் கூலிப்படை ஏவி தந்தை கொலையில் மகன், மருமகள் கைது

/

சொத்து தகராறில் கூலிப்படை ஏவி தந்தை கொலையில் மகன், மருமகள் கைது

சொத்து தகராறில் கூலிப்படை ஏவி தந்தை கொலையில் மகன், மருமகள் கைது

சொத்து தகராறில் கூலிப்படை ஏவி தந்தை கொலையில் மகன், மருமகள் கைது


ADDED : ஜன 27, 2024 11:11 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: தந்தை கொலையில் மகன், மருமகள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் கூலிப்படை ஏவி, தீர்த்துக்கட்டியது தெரிய வந்துள்ளது.

பாகல்கோட் தாலுகா, திம்மாபுரா கிராமத்தில் வசித்தவர் சன்னப்பா, 66. கடந்த 25ம் தேதி திம்மாபுரா அருகே, ராம்புரா கிராமத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும், மர்ம நபர்கள் கொன்றது தெரிந்தது.

பாகல்கோட் ரூரல் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த கொலை வழக்கில், விஜயபுரா நிடகுந்தியின் மகேஷ் மரடிமத், 45, நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் சன்னப்பாவை அவரது மகன் சன்னபசப்பா, 38, மருமகள் சிவபசவம்மா, 36, உறவினர் ரமேஷ் மனகுளி, 34, ஆகியோர், கொலை செய்ய கூறியதும், இதற்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்ததும் தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் மூன்று பேரும், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். சன்னப்பா பெயரில் 37 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி, சன்னபசப்பா கேட்டுள்ளார்.

அவர் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த மகன், மருமகள், உறவினர் மூன்று பேரும் சேர்ந்து, திட்டம் தீட்டி, ரமேஷ் மனகுளியை கூலிப்படையாக ஏவிக் கொன்றதும், அவருக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்ததும் அம்பலமானது. நான்கு பேரிடமும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us