நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணஜி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா நேற்று கோவா வருகை தந்தார். தற்போது அவர் தெற்கு கோவாவில் உள்ள ஓய்வு விடுதியில் தங்கிஉள்ளார்.
இது, அவரது தனிப்பட்ட பயணம் என, காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியாவின் கோவா வருகை குறித்து மாநில காங்., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கோவாவில் தங்கியிருக்கும் போது, சோனியா கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டார். காங்., நிர்வாகிகளை சந்தித்து பேச மாட்டார்' என்றார்.
புதுடில்லியில் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், உடல் நலம் கருதி, சோனியா கோவா வந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.