sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டசபையை சுமுகமாக நடத்த சபாநாயகர் காதர் யோசனை

/

சட்டசபையை சுமுகமாக நடத்த சபாநாயகர் காதர் யோசனை

சட்டசபையை சுமுகமாக நடத்த சபாநாயகர் காதர் யோசனை

சட்டசபையை சுமுகமாக நடத்த சபாநாயகர் காதர் யோசனை


ADDED : டிச 18, 2024 10:28 PM

Google News

ADDED : டிச 18, 2024 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி; ''எம்.பி.,யாக இருந்தவர்கள், சபாநாயகர் ஆனால் மட்டுமே, சட்டசபையை சுமுகமாக நடத்த முடியும்,'' என, சபாநாயகர் காதர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

கர்நாடக சட்டசபை நேற்று துவங்கியதும் மாநில உணவுத் துறை அமைச்சர் முனியப்பா பேசினார்.

அவர் கூறுகையில், ''லோக்சபா கூட்டத்தொடர் காலை 11:00 மணிக்கு துவங்கும். இரவு வரை நீடிக்கும். சட்டசபையிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முதலில் கேள்வி, பதில் நிரல் துவங்க வேண்டும். அதில் முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொள்ள வேண்டும். புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நமக்கு ஒழுக்கம் இல்லை என்றால் எப்படி? மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்,'' என்றார்.

சபாநாயகர் காதர், ''லோக்சபா எம்.பி.,யாக இருந்த உங்களை போன்றவர்கள், இந்த சபையில் சபாநாயகர் நாற்காலியில் அமர வேண்டும். அப்போது தான் சபை சுமுகமாக நடக்கும்,'' என, அதிருப்தி பதில் அளித்தார்.

அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா, ''நாங்கள் தான் எப்போதும் சபைக்கு தாமதமாக வருவோம். ஆனால் இன்று நீங்களே தாமதப்படுத்தி விட்டீர்கள்,'' என சபாநாயகரை பார்த்துக் கூறினார்.






      Dinamalar
      Follow us