sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநில காங்., அரசு திவால்; பா.ஜ., தலைவர் கிண்டல்

/

மாநில காங்., அரசு திவால்; பா.ஜ., தலைவர் கிண்டல்

மாநில காங்., அரசு திவால்; பா.ஜ., தலைவர் கிண்டல்

மாநில காங்., அரசு திவால்; பா.ஜ., தலைவர் கிண்டல்


ADDED : டிச 17, 2024 10:14 PM

Google News

ADDED : டிச 17, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு; 'மாநில காங்கிரஸ் அரசு திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

தன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் விஜயேந்திரா குறிப்பிட்டு உள்ளதாவது:

பால் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க மாநில காங்கிரஸ் அரசிடம் பணம் இல்லை. பால் பண்ணை, கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கும் விவசாயிகள் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை.

பால் விவசாயிகளுக்கு இதுவரை வழங்க வேண்டிய 606.69 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறையே காரணம், என கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ், சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

இது முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனது கஜானாவை காலி செய்து, திவாலாக்கிவிட்டது என்பதை நிரூபித்துள்ளது.

தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்ட பணத்தை, பிற நோக்கங்களுக்காக, பால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை பயன்படுத்தியதா என்று தெரியவில்லை.

மக்கள் விரோத காங்கிரஸ் அரசு, மாநில மக்கள், விவசாயிகள் நலனுக்காக துளியளவு கூட மேம்பாட்டு பணிகளை செய்யாத அரசு, ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்க தகுதியில்லை.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us