sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதை: மஹா., அரசு அறிவிப்பு

/

ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதை: மஹா., அரசு அறிவிப்பு

ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதை: மஹா., அரசு அறிவிப்பு

ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதை: மஹா., அரசு அறிவிப்பு

5


UPDATED : அக் 10, 2024 10:18 PM

ADDED : அக் 10, 2024 07:39 AM

Google News

UPDATED : அக் 10, 2024 10:18 PM ADDED : அக் 10, 2024 07:39 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மஹா., முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். அவரது உடல் இன்று(அக்.,10) காலை 10 மணி தெற்கு மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ., அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரம் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று(அக்.,9) இரவு 11.30 மணிக்கு காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று(அக்.,10) துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து, மஹா., முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரத்தன் டாடாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக, இன்று(அக்.,10) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தெற்கு மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ., அரங்கில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள் ரத்து


பிற்பகல் 3.30 மணியளவில், அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக வொர்லி சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். துக்கத்தின் அடையாளமாக மஹாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய மூவர்ணக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மஹா.,வில் இன்று மாநில அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us