உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 02, 2024 10:57 PM
அ நிறம் | அளவு
மல்லேஸ்வரம்: பி.எம்.டி.சி., பஸ் மோதியதில், பொறியியல் மாணவி பலியானார்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் வசித்தவர் குஸ்மிதா, 21. இவர் தனியார் கல்லுாரியில் பொறியியல் படித்தார். இவர் நேற்று காலை இரு சக்கர வாகனத்தில், கல்லுாரிக்கு புறப்பட்டார்.
மல்லேஸ்வரத்தின், ஹரிசந்திரா காட் அருகில் செல்லும் போது, பி.எம்.டி.சி., பஸ் மோதியது. சிறிது தொலைவு மாணவியை இழுத்து சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
