sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியர்கள் 2 பேருக்கு 'மாணவர் ஆஸ்கர்' விருது; திரைத்துறை பாராட்டு!

/

இந்தியர்கள் 2 பேருக்கு 'மாணவர் ஆஸ்கர்' விருது; திரைத்துறை பாராட்டு!

இந்தியர்கள் 2 பேருக்கு 'மாணவர் ஆஸ்கர்' விருது; திரைத்துறை பாராட்டு!

இந்தியர்கள் 2 பேருக்கு 'மாணவர் ஆஸ்கர்' விருது; திரைத்துறை பாராட்டு!

1


ADDED : செப் 19, 2024 10:09 AM

Google News

ADDED : செப் 19, 2024 10:09 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய மாணவர்கள் 2 பேருக்கு மதிப்புமிக்க மாணவர் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் ஆஸ்கர் விருது போட்டிக்கு, உலகெங்கிலும் உள்ள 738 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 2,683 பதிவுகள் வந்திருந்தன. பரிசீலனை முடிவில் 15 மாணவர்கள் மட்டுமே வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் இந்திய மாணவர்கள் 2 பேரும் உள்ளனர்.

இந்திய மாணவர் ரிஷப் ராஜ்

சமீபத்தில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இந்திய மாணவர் ரிஷப் ராஜ் ஜெயின், 'A Dream Called Khushi' (மகிழ்ச்சி) என்ற தலைப்பில் தயாரித்த ஆவணப்படத்திற்கு மாணவர் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஜெயின் இயக்கிய 2024ம் ஆண்டு மிகவும் வசீகரிக்கும் ஆவணக் குறும்படம், வங்கதேசத்தில் உள்ள ஒரு ரோஹிங்கியா அகதியின் கதையை எடுத்துரைக்கிறது. அவர் தனது கல்விக்காகவும் கனடாவில் படிக்க வேண்டும் என்ற கனவுக்காகவும் பாடுபடுகிறார்.

கிராமம் தேவை!

விருது பெற்ற, ரிஷப் ராஜ் ஜெயின் கூறியதாவது: 'ஒரு திரைப்படத்தை உருவாக்க ஒரு கிராமம் தேவை, இது இல்லாமல் இது சாத்தியமில்லை. இதில் பணியாற்றிய அற்புதமான குழுவின் பங்கு அவசியம். இது ஒரு கூட்டு வெற்றி மற்றும் உலகின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றில் தெற்காசியாவின் கதைகளை காட்சிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

அதேபோல், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அகாடமியை சேர்ந்த பிலிம் டிசைன் மாணவர் அக்ஷித் குமாருக்கு விருது கிடைத்துள்ளது. இது மிக்க மகிழ்ச்சி என அக்ஷித் குமார் பெருமிதம் தெரிவித்தார்.அனைத்து மாணவர் ஆஸ்கர் விருது பெற்ற படங்களும், 2024 ஆஸ்கர் விருதுக்கு அனிமேஷன் குறும்படம், லைவ் ஆக்ஷன் குறும்படம் அல்லது ஆவணப்பட குறும்படம் பிரிவில் போட்டியிட தகுதியுடையவை.

பாராட்டு!

மாணவர் ஆஸ்கர் விருதுகள் பெற்ற இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திரைத்துறையினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us